நேர்காணலுக்கு சென்ற பொழுது அந்த மேலாளர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்று வரும் ஒரு குருவின் பரம பக்தர் என்று அவர் அறை முழுதும் இருந்த குருவின் படம் காட்டியது. techical round முடிந்ததும் என்னிடம் அவர் இப்பொழுது உங்களிடம் சில முக்கியமான விஷயங்கள் என்றார். நான் ஆவலானேன். என்னுடைய தெய்வம் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்ன சொல்கிறார் என்றால், "ஒரு விவசாயி தன் நிலத்தில் எந்த அளவு உழைக்கிறானோ அந்த அளவுதான் விளைச்சல் இருக்கும், அதே போல நீங்களும் இந்த அலுவலகத்தில் எந்த அளவு உழைக்கிறீர்களோ அந்த அளவு உங்களுக்கு பலன் இருக்கும், என் குரு எத்துனை பெரிய விஷயம் சொல்லி இருக்கிறார் பார்த்தீர்களா, நீங்களும் இந்த நிமிடம் முதல் அவரின் பக்தர் ஆகி இருப்பீர்களே என்றார். அவரை பார்க்க பாவமாக இருந்தது.
ஏன்டா இந்த கருத்தை இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் வரும் சிறு கதைகள் கூட சொல்கிறதே, முன்னோர்கள் "உழைப்பே உயர்வு"அன்று இதை தானே இரண்டே வார்த்தையில் சொல்லி இருக்கிறார்கள்.
இதை சொல்ல ஒரு ஆள், இந்த கருத்தை அவர் கூறியதால், அவரை தெய்வம் என்று கூற சிலர்.
மாக்கா பசங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக