புதன், 25 மே, 2011

வேண்டாம் அம்மா இலவசம்

முதல்வரின் ஆட்சி நல்லாட்சியாக அமைந்து விடும் என்று பெரும் எதிர்பார்ப்பு. 
நானும் நம்புகிறேன். 
ஆனால்  மணல் கொள்ளை தடுப்பு, பள்ளி கட்டணம், போக்குவரத்து, இன்னபிற திட்டங்களை  உடனடியாக செயல் படுத்தாமல், சின்ன குழந்தையை போல 10th ,+12 மாணவர்கள் online -இல் பதிவு செய்து கொள்ள ஆணையிட்டுள்ளேன், மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளேன் என்று சொல்லி  கொண்டு இருக்கிறார். ஒரு மாநில முதல்வர் சொல்ல வேண்டிய விஷயமா இது? ஒரு சுற்றறிக்கையை வெளியிட கல்வி அலுவலருக்கும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கும் உத்தரவிட்டு விட்டு அடுத்த வேலையை பார்க்காமல் அதை ஒரு சாதனை திட்டம் போல சொல்லி கொண்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பில் பதவி ஏற்று இருக்கும் அவருக்கு அழகல்ல.
அவரின் முகம் பார்த்து, எதாவது ஒரு வளர்ச்சி திட்டம் வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்கு நல்லன பல செய்வார் என்று நம்புகிறேன். 
தயவு செய்து இலவச லேப்டாப் இருபது கிலோ இலவச அரிசி என்று கவனம் செலுத்தாமல் உருப்படியான திட்டம் தேடுங்கள். உங்கள் தேர்தல் அறிக்கைக்காக யாரும் உங்களுக்கு ஒட்டு போட வில்லை. வார்த்தைக்கு வார்த்தை தேர்தல் அறிக்கை திட்டங்களை ஒன்றரை ஆண்டுக்குள் நிறை வேற்ற உழைக்க   வேண்டும் என்று உங்கள் MLA களுக்கு சொள்கிறீர்கலாம்.
உங்கள் அறிக்கைகளில் அந்த இலவசங்களை மட்டும் விட்டு விட்டு எதாவது வேலை வாய்ப்பு வழங்கும் திட்டங்கள் இருந்தால் நிறைவேற்றுங்கள்.
வேண்டாம் அம்மா இலவசம்.
 

வெள்ளி, 20 மே, 2011

தொடங்கியாயிற்று புதிய ஆட்சி

தொடங்கியாயிற்று புதிய ஆட்சி. முதல் நாளே எழு திட்டங்கள். அருமை. முதல் நாளே கலர் டிவி, ஒரு ரூபாய் அரிசி  தந்த கருணாநிதி அவர்களை அடித்து துரத்தி இருகிறார்கள் மக்கள். ஏன்? தேவை தாலிக்கு தங்கமோ,இருபது கிலோ இலவச அரிசியோ அல்ல.
வேலை வாய்ப்பு, தரமான கல்வி, சாலை வசதிகள், மணல் கொள்ளை தடுப்பு,ஏழைகளுக்கு  மருத்துவ வசதி, விலைவாசி கட்டுப்பாடு, சுகாதாரமான சுற்றுபுறம், இன்னும் பல ஆக்க பூர்வமான திட்டங்கள். உங்களுக்கு ஓட்டு போட்டது உங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும் கவர்ச்சி திட்டங்களுக்காக அல்ல, சென்ற ஆட்சியில் பெற முடியாத மேற் சொன்னவற்றை பெறவே என்று யார் சென்று முதல்வரிடம் கூறுவது? அவர் என்னவென்றால் இந்த கவர்ச்சி திட்டங்களை நிறை வேற்ற ஒரு தனி துறையையே அமைத்து இருக்கிறார். 
கோட்டைக்குள் ஓடி சென்று அவரிடம் இதை சொல்லலாமா என்று நினைக்கிறேன். எங்கே, அவர்தான்  மறுபடியும் வழக்கம் போல காவல் துறை இடமாற்றம், சட்டசபை இட மாற்றம் என்று அரசியலில் பிஸி ஆக இருக்கிறார்.பிரச்சினையே நல்லனவற்றை எடுத்து சொல்லக்கூடியவர்கள் அவர் அருகில் செல்ல முடிவதில்லை, அருகில் செல்பவர்களுக்கு மக்கள் பற்றி அக்கறை இல்லை.
இறைவன் தான்   அவர் கனவில் வந்து எதை மக்கள் எதிர் பார்கிறார்கள் என்று அவரிடம் சொல்ல வேண்டும். சொல்வாரா?