வெள்ளி, 20 மே, 2011

தொடங்கியாயிற்று புதிய ஆட்சி

தொடங்கியாயிற்று புதிய ஆட்சி. முதல் நாளே எழு திட்டங்கள். அருமை. முதல் நாளே கலர் டிவி, ஒரு ரூபாய் அரிசி  தந்த கருணாநிதி அவர்களை அடித்து துரத்தி இருகிறார்கள் மக்கள். ஏன்? தேவை தாலிக்கு தங்கமோ,இருபது கிலோ இலவச அரிசியோ அல்ல.
வேலை வாய்ப்பு, தரமான கல்வி, சாலை வசதிகள், மணல் கொள்ளை தடுப்பு,ஏழைகளுக்கு  மருத்துவ வசதி, விலைவாசி கட்டுப்பாடு, சுகாதாரமான சுற்றுபுறம், இன்னும் பல ஆக்க பூர்வமான திட்டங்கள். உங்களுக்கு ஓட்டு போட்டது உங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும் கவர்ச்சி திட்டங்களுக்காக அல்ல, சென்ற ஆட்சியில் பெற முடியாத மேற் சொன்னவற்றை பெறவே என்று யார் சென்று முதல்வரிடம் கூறுவது? அவர் என்னவென்றால் இந்த கவர்ச்சி திட்டங்களை நிறை வேற்ற ஒரு தனி துறையையே அமைத்து இருக்கிறார். 
கோட்டைக்குள் ஓடி சென்று அவரிடம் இதை சொல்லலாமா என்று நினைக்கிறேன். எங்கே, அவர்தான்  மறுபடியும் வழக்கம் போல காவல் துறை இடமாற்றம், சட்டசபை இட மாற்றம் என்று அரசியலில் பிஸி ஆக இருக்கிறார்.பிரச்சினையே நல்லனவற்றை எடுத்து சொல்லக்கூடியவர்கள் அவர் அருகில் செல்ல முடிவதில்லை, அருகில் செல்பவர்களுக்கு மக்கள் பற்றி அக்கறை இல்லை.
இறைவன் தான்   அவர் கனவில் வந்து எதை மக்கள் எதிர் பார்கிறார்கள் என்று அவரிடம் சொல்ல வேண்டும். சொல்வாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக